தை பிறந்தது, வழி பிறந்தது

பிறந்த கிரகத்தை விட்டு புகுந்த கிரகத்திற்கு
பயணமாக, புது வழியில், எங்கள் தெருவில், தேரில் வந்து,
இயற்க்கையில் வானில் உதிக்கும் சூரிய பகவான்,
இன்று எங்கள் இல்லத்தில் இறங்கினார் என்று,
அதிகாலையில் கண் விழித்து பார்த்து, ரசித்தேன், தரிசித்தேன்.

ஆனால் அந்த அழகு தேரை,
என் அழகு அரசி, அரிசி மாவு கோலத்தில் உருவாக்கினார் என்றும்,
என் குட்டி அழகி அதற்கு வண்ணம் தீட்டினார் என்றும்,
அதை ரசித்த இறைவன், வியந்து, மகிழ்ந்து,
நேரில் வந்து, தேரில் அமர்ந்து, அருள்கிறார் என்றும்,
உணர்கிறேன், மகிழ்கிறேன்.
நீங்களும் அவசியம் வாருங்கள், கண்டு மகிழுங்கள்.

மகிழ்வித்து மகிழ்..

குறிப்பு –
நாளை காலை வரைதான் தேர் எங்கள் இல்லத்தில் நிற்கும்,
மற்றபடி எப்பொழுதும் போல, சூரியன் தன் கடமை தவறாமல் நம்மை காக்கும்.

புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. சூரியனை யாராலும் படம் பிடிக்கவும் முடியாது.


பொங்கலோ பொங்கல்..

மணிகண்டன் பிரபாகரன்

நன்றி..

1 liked
Like
 2020-01-18 12:00:00
 Manikandan Prabakaran